அங்காடி தெரு மகேஷிற்கு இப்படியொரு நிலைமையா..? என்ன ஆனார் தெரியுமா..?


கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்து தமிழ் திரையுலகில் பெரும் புரட்சியே ஏற்படுத்திய படம் அங்காடி தெரு. இதில் நடிகை அஞ்சலியை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள்.

இந்த படத்திற்கு புதுமுகங்கள்தான் தேவை என முடிவு செய்து இயக்குனர் பெரும்பாலான நடிகர்களை அறிமுகப்படுத்தினார்.

இந்த படத்திற்கு கதாநாயகனை தேர்வு செய்ய பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினார் இயக்குனர் வசந்தபாலன்.

இறுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த பொறி வியாபாரியின் மகன் மகேஷ் இந்த படத்திற்கு கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


இவருக்கு அறிமுக படமே பெரும் வெற்றி படமாக அமைந்தது.

அதன்பிறகு அவரால் தொடர்ந்து சினிமா வாழ்க்கையை தக்க வைத்து கொள்ள தெரியவில்லை. இதனை தொடர்ந்து வெளிவந்த கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், வேல்முருகன் போர்வெல், அழகு குட்டி செல்லம் போன்ற படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்த நிலையில் இவர் வீராபுரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதன் தொடக்க விழா நடந்தது. இந்த படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி