பிரபல நடிகையின் வைரலாகிய புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்..!! எதனால் தெரியுமா..?


நயன்தாரா பொற்கோவிலுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படங்களில் டோரா மட்டும் தான் சரியாகப் போகவில்லை. மற்றபடி அறம், வேலைக்காரன், ஜெய் சிம்ஹா ஆகிய படங்கள் ஹிட்டாகின.

இந்த ஆண்டும் நயன்தாரா ரொம்ப பிசி. அவர் இந்த ஆண்டு தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.


இந்நிலையில் அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளார்.

கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவிலில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. நயன்தாராவின் புகைப்படங்களை பார்த்த அவரின் ரசிகர்கள் ப்ப்பா எவ்வளவு அழகு என்று வியந்து பாராட்டியுள்ளனர். ஒரு வேலை திருமணத்திற்கு ஆசி வாங்க போயிருப்பாரோ என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி