கவர்ச்சி நடிகையின் தற்கொலைக்கு என்ன காரணம் தெரியுமா..? மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்..!!


1980 களில் கொடி கட்டி பறந்த நடிகை என்றால் அவர் சில்க் ஸ்மிதாதான். அந்த காலக்கட்டத்தில் இவரின் நடனம் இல்லாத படமே இல்லை என்று கூறலாம்.

மேலும் இவரின் கவர்ச்சி நடனத்தால் ஓடிய படங்கள் ஏராளம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே கடந்த 1996ம் ஆண்டு ஒருநாள் திடீரென தனக்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது சாவில் உள்ள மர்மம் இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாகவே உள்ளது.


அது குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அவர் தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஒரு வீடு ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளார். இந்த வீட்டை தன்னுடைய பெயரில் வாங்க விருப்பப்பட்டார் சில்க் ஸ்மிதா.

ஆனால் அவருடன் இருந்த தாடிக்காரர் தன்னுடைய பெயரில் வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது பெரும் சண்டையாக மூண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு முன்னதாக அவருடைய தாய் சென்னை சென்று உடன் தங்கி இருந்தார். அவரது தாயார் சென்ற 3 வது நாளிலேயே சில்க் ஸ்மிதா தூக்கி தொங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி