கொடி கட்டி பறந்த ராமராஜனின் இன்றைய பரிதாப நிலைமை..!! என்ன ஆனார் தெரியுமா..?


ஒரு காலத்தில் பி மற்றும் சி சென்டர்களில் வசூல் மன்னாக திகழ்ந்தவர் ராமராஜன்தான். தியேட்டரில் டிக்கெட் கிழித்து கொண்டிருந்தவர், பின்னர் உதவி இயக்குனராக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அப்போது இவரை நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் கதாநாயகனாக அழகப்பன் அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்கள் இவருக்கு புகழை பெற்று கொடுத்தன. நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பி ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது.

அந்த காலக்கட்டத்தில் ரஜினிக்கே சவால் விட்டார். உடன் இருந்தவர்கள் எல்லாம் நீங்கள்தான் அடுத்த எம்.ஜி.ஆர் என தூபம் போட்டனர்.


வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை குழந்தைகளை விட்டு பிரிந்தார்.

அதன்பிறகு அவருக்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை. சொந்த படம் எடுத்து இருந்த சொத்துக்களை எல்லாம் இழந்தார். அரசியலில் நுழைந்தார். ஜெயலலிதா எம்.பியாக்கி அழகு பார்த்தார்.

அரசியல் வாழ்வும் எடுபடவில்லை. ஜெயலலதா மறைவுக்கு இவரை யாரும் ஏறெடுத்து பார்க்கவில்லை.

இந்த நிலையில், விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்தார்.

அந்த நேரத்தில் மனைவிதான் ஓடோடி வந்து உதவி செய்தார். இப்போது கேட்பாரற்று உதவிக்கு ஆள் இன்றி தவிக்கிறார். மனைவி மற்றும் பிள்ளைகள் மனது வைத்தால்தான் உண்டு என்ற நிலையில்…

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி