அசால்ட்டாக 120 அடி உயரத்தில் தொங்கிய திரிஷா..!! அதிர்ச்சியில் மயங்கி விழுந்ந இயக்குனர்..!!


மதுர, மிரட்டல், அரசாங்கம் ஆகிய படங்களை டைரக்டு செய்த ஆர்.மாதேஷ் அடுத்து, திரிஷாவை கதை நாயகியாக நடிக்க வைத்து, ‘மோகினி’ என்ற திகில் படத்தை இயக்கி வந்தார். படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே எழுதியிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்‌ஷ்மன் குமார் தயாரித்தார்.

இதில் திரிஷாவுடன், ஜாக்கி ஷெராப், முகேஷ் திவாரி, யோகி பாபு, பூர்ணிமா பாக்யராஜ், சாமி நாதன், மதுமிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:-

“லண்டனில் நடக்கும் பேய் கதையாக இந்த படம் தயாராகி இருக்கிறது. இதில், திரிஷா இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கதையை கேட்டதும், உடனே நடிக்க சம்மதித்தார். கதைப்படி, அவருக்கு அதிரடி சண்டை காட்சிகள் உள்ளன.


“உயரத்தில் பறக்கும் காட்சிகள், தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் காட்சிகள் எல்லாம் இருக்கிறதே…என்னால் நடிக்க முடியுமா?” என்று கேட்டார்.

இயல்பாகவே திரிஷா துணிச்சல் மிகுந்த சுபாவம். என்றாலும், கடுமையான பயிற்சிகள் எடுத்து கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, 60 நாட்கள் நடித்து கொடுத்தார். சாகச காட்சிகளில், ‘டூப்’ இல்லாமல் அவரே நடித்தார். 120 அடி உயரத்தில், அவரை கயிற்றில் கட்டி தொங்க விடுகிற மாதிரி ஒரு காட்சி. அதில், வலியை பொருட்படுத்தாமல் நடித்தார்.

படத்தில் பேய் வரும் காட்சிகள், ‘கிராபிக்ஸ்’சில் மிரட்டலாக படமாக்கப்பட்டுள்ளன. லண்டன், பிரான்ஸ், போர்ச்சுக்கல் உள்பட 9 நாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.”

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB