சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளாக சங்கீதா மற்றும் நிவேதிதா ஆகியோர் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த சம்பவம் வைரலாக பரவியது.
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் தொகுபாளினிகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக அவரை கிண்டல் செய்தவர்களை நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கடுமையாக விளாசியுள்ளார்
அதில் ஒருவர் உயரமாக இருப்பது அல்லது சிவப்பு கருப்பாக இருப்பது முக்கியம் அல்ல.
ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் என்பது தான் முக்கியம் .
எனவே சூர்யாவை பற்றி விமர்சித்தவர்கள வெட்கப்பட வேண்டும். இதனையடுத்து கிண்டல் செய்தவர்கள் சூர்யாவிடம் மன்னிப்பு கேளுங்கள் என நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து சூர்யா தனது ரசிகர்களிடம் இதை பெரிய விசயமாக வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி