கமல் மனைவி சரிகாவின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? இப்படியொரு பரிதாப வாழ்க்கையா..?


நடிகர் கமல் வாணி கணபதி என்பரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவரை விட்டு பிரிந்தவுடன் சரிகாவின் காதல் வலையில் வீழ்ந்தார். இவருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்தனர். ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் பிறந்த பின்னர்தான் திருமணம் செய்து கொண்டார்.

இவர் கமலை போன்றே 4 வயது முதல் இந்தி மற்றும் மராத்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். பின்னர் கதாநயாகியாக நடித்து வந்தபோதுதான் கமலின் காதல் வலையில் வீழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்கு பின்னர் சரிகா சினிமாவுக்கு முழுக்கு போட்டு கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக மாறினார். ஹேராம் படத்திற்காக தேசிய விருது கூட வாங்கி உள்ளார். பின்னர் கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து வாங்கி கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.

இப்போது சினிமா மற்றும் மீடியாவின் வெளிச்சம் படாமல் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி