கூட்டத்தில் அத்து மீறிய ரசிகர்கள்…! அலறிய தமன்னா…!

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ தொடர் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரில் தமன்னா கவர்ச்சியாக நடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஜி கர்தா’ வெப் தொடரிலும் தமன்னா அளவிற்கு மிஞ்சிய ஆபாச காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார். கதைக்கு தேவை என்பதால்தான் படுக்கை அறை காட்சியில் நடித்தேன் என்று விளக்கமும் அளித்து இருந்தார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க தமன்னா சென்று இருந்தார். அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவர்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது திடீரென்று ரசிகர்கள் கூட்டம் தமன்னாவை சூழ்ந்து செல்பி எடுத்தனர்.

இதனால் கூட்டத்தில் தமன்னா சிக்கினார். அப்போது சிலர் அவரை தவறாக தொட்டனர். கையை பிடித்தும் இழுத்தனர். அதிர்ச்சியான தமன்னா ரசிகர்களை பார்த்து கோபமாக கத்தினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் தமன்னாவிடம் அத்துமீறி நடந்த கொண்டது யார் என்று தெரியவில்லை. பின்னர் பாதுகாவலர்கள் கூட்டத்தினரை அப்புறப்படுத்தி தமன்னாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!