பஞ்சாபி மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம்.. வைரமுத்து நெகிழ்ச்சி by priya | @ | June 1, 2023 9:08 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest 1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. வைரமுத்துவின் இந்த படைப்பு வணிக ரீதியிலும் வாசகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகம் 2003-ம் ஆண்டு ‘சாகித்ய அகாடமி’ விருதை பெற்றது.இந்நிலையில், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ தற்போது பஞ்சாபி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை மன்ஜித் சிங் என்பவர் மொழிப்பெயர்த்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.அதில், “பஞ்சாபி மொழியில் கள்ளிக்காட்டு இதிகாசம் உலகில் 12கோடி மக்களால் பேசப்படும் பெருமொழி பஞ்சாபி பரீதுதீன் முதல் அம்ரிதா ப்ரீத்தம் வரை 11 நூற்றாண்டுகள் செழுமைப்படுத்தப்பட்டது பஞ்சாபின் பஞ்ச நதிகளோடு வைகை சங்கமிப்பது பெருமை இதையும் படியுங்கள்: ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. கமல் பங்கேற்பு மொழிபெயர்ப்பு மன்ஜித் சிங் நன்றி சாகித்ய அகாடமி” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…