குறித்த சமூகத்தை கேவலமாக பேசிய திரைப் பிரபலங்கள்..!! அதற்காக இப்படியா பண்ணுவீங்க..!!


பொது நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷெட்டிக்கு ராஜஸ்தான் காவல் நிலைய தரப்பில் சம்மம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 22ந் தேதி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல பாலிவிட் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி, தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வார்த்தையை பயன்படுத்தியதாக, அவர்கள் மீது ரோஜ்கார் அகாரி குடியரசுக் கட்சி சார்பில் மும்பையில் புகார் அளிக்கப்பட்டது. ராஜஸ்தானைச் சேர்ந்த தலித் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான அந்த வார்த்தையை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி, இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் சாரூ மாவட்ட டி.எஸ்.பி சம்மன் அனுப்பியுள்ளார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, விழாவில் நான் பேசிய வார்த்தைகளில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். மேலும் நான் கூறிய கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி