‘லியோ’ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த புதிய அப்டேட்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ‘லியோ’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ‘லியோ’ படம் குறித்த அப்டேட் வழங்குமாறு கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த 60 நாட்களில் முடிவடைந்து விடும் என்றும், இந்த படம் மிகச்சிறப்பான ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!