பொன்னியின் செல்வன்- 2 இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்பு என தகவல்

இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா புரொடக்ஷன் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தச் சூழலில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

முதல் பாகம் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினாராக கலந்து கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘அக நக’ பாடல் சமீபத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் வென்றது. ஷக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் பாடல் வெளியானது. பொன்னியன் செல்வன் 2 படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!