வனிதாவின் அடுத்த டார்கெட் இவங்கதான்.!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த இரு சீசன்களைப் போன்று இல்லாமல் நிஜ வாழ்க்கையினைப் பிரதிபலிக்கும் படி உள்ளது சீசன் 3. மதுமிதா, மீரா மிதுன் ஆகியோர் மீது கோபத்தில் இருக்கும் அபிராமி, தொடர்ந்து அவரை டார்க்கெட் செய்து வாக்குவாதம் செய்து வருகிறார்.

முதல் வாரத்தில் எந்த எலிமினேஷன் இல்லாத நிலையில், 16 போட்டியாளர்களும் 2ஆவது வாரத்திற்கு சென்றனர். ஆனால், 2ஆவது வாரத்தில் சரவணன் சாமி ஆளவிட்டுருங்க.. மெண்டல் டார்ச்சராக இருக்கு என்பது போன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். என்னை வெளியில் அனுப்பி விட்டு எனக்குப் பதிலாக வேறு யாரையாவது கொண்டு வாங்க என்று கேட்டார்.

இது ஒரு புறம் இருக்க, மதுமிதா என்னுடைய வீட்டில் நான் பேச வேண்டும் என்று கேட்டார். இதற்கு எல்லாம் மூல காரணமாக இருந்தது அபிராமி அண்ட் டீம் தான். இந்த டீமில், அபிராமி உடன் இணைந்து சாக்‌ஷி, ஷெரின், ரேஷ்மா, வனிதா ஆகியோர் பலர் இருந்தனர்.

ஆனால் நாமினேஷன் அன்று அபிராமி மதுமிதாவின் பெயருக்கு பதிலாக, மீராவின் பெயரை மாற்றிக் கூறியதால், ஷெரின், சாக்ஷி, வனிதா, ரேஷ்மா அபிராமியின் மீது செம கடுப்பில் உள்ளனர்.

எப்போ சான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார் வனிதா, அதேபோல் அபிராமியும் இவர்களை விட்டு விலகியதால் ஷெரின் மற்றும் சாக்ஷியும் செம கடுப்பில் உள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.