தாய்லாந்தில் தற்காப்பு கலை பயிற்சி எடுக்கும் சிம்பு

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

‘எஸ்.டி.ஆர். 48’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்திற்காக சிம்புவிற்கு முக்கிய பயிற்சி ஒன்று கொடுக்கப்பட இருக்கிறது. தேசிங்கு பெரியசாமி கொடுத்த திரைக்கதைப்படி தற்காப்புக் கலை தெரிந்த நாயகனாக சிம்பு வருகிறார். இதற்காக அவருக்குச் சிறப்பு தற்காப்புக் கலையை கற்றுக் கொடுக்க தாய்லாந்தில் முகாமிட்டிருக்கிறார் என்கிறார்கள். இங்கு 15 நாட்கள் தங்கியிருந்தபடி தற்காப்புக் கலையைக் கற்றுத் திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!