‘காந்தாரா’ பட இயக்குனரை பாராட்டிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை by priya | @ | March 9, 2023 9:03 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்துள்ளார்.இது தொடர்பாக பசவராஜ் பொம்மை தனது சமூக வலைதளத்தில், “கன்னடத்தின் பெருமைக்குரிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் மூலம் நமது மண்ணின் கலாச்சாரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், வனவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை நம் முன் வைத்தவர். இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் விரைவில் தீர்க்க அரசு ஆர்வமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…