தமிழில் கமலுக்கு பிறகு கதாபாத்திரத்திற்காக தன்னையே வருத்தி கொள்ளும் நடிகர் என்றால் அது விக்ரம்தான். எந்த விதமான பந்தாவும் இல்லாதவர்.
இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த ஸ்கெட்ச் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பொங்கல் சிறப்பு நிகழ்சியாக பிரபல தொலைக்காட்சியில் விக்ரம் தமன்னா கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் தொகுப்பாளர்கள் அஜித் விஜயிடம் நீங்கள் திருட நினைப்பது எது என கேட்டனர்.
அதற்கு அவர் மிகவும் ஜாலியாக அஜித்திடம் இருந்து அவரது பைக்கையும், விஜயிடம் இருந்து டான்சையும் திருட நினைப்பதாக கூறினார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி