விஜய்யின் சச்சின் படத்தில் நடித்தவர் பிபாஸா பாசு. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இந்தி நடிகர் கரண் சிங் குரோவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்தது. இந்நிலையில் கான்டம் விளம்பரம் ஒன்றில் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தது. பெருந்தொகை சம்பளமாக பெற்றுக்கொண்டு நடிக்க சம்மதித்தனர்.
இருவரும் நெருக்கமாக நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அதற்கான காட்சிகளும், ஸ்டில்களும் இணைய தளத்தில் வெளியானது. அதைக்கண்ட நெட்டிஸன்கள் பிபாஸா மீது பாய்ந்திருக்கின்றனர்.
‘விளம்பரம் என்ற பெயரில் ஆபாசத்தை பரப்ப வேண்டாம். உங்களுக்கு படம் கிடைப்பதில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக இப்படியா?’ எனவும், ‘நீங்கள் பாதுகாப்பான உறவு பற்றி விளக்குகிறீர்களா?
அல்லது அந்தப் பெயரில் மினி ஆபாச படத்தை வெளியிடுகிறீர்களா? எனவும் நெட்டிஸன்கள் பிபாஸா மீது பாய்ந்திருக்கின்றனர். அதற்கு பதில் அளித்துள்ள பிபாஸா,’வம்பிழுப்பவர்கள் எல்லா இடத்திலும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
இந்த விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் என்ன காரியம் நடக்க வேண்டுமோ அது சாதிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பாதுகாப்பான உறவு பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த படம் ஒரு கவர்ச்சி களந்த ஆபாசமாக இருக்கும் என்பது முதலிலேயே தெரியும்.
அதனால்தான் முன்னதாக காட்சிகள் கவித்துவமாக படமாக்குவதுபற்றி படக்குழுவிடம் பேசினேன். எதிர்பார்த்தது போலவே கவித்துவமாக காட்சிகள் வந்திருக்கிறது. இதனால் தான் இந்த விளம்பரத்தில் ஆபாசமாக நடித்தேன் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!