கேரளாவில் நடிகர் பகத் பாசிலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

கேரளாவில் மலையாள திரையுலகினரிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மோகன்லால் படங்களை தயாரித்த சினிமா தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கேரள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசிலிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இந்த விசாரணை நடந்துள்ளது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!