செல்போன் பார்க்காமல் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தை பார்த்திருக்கிறேன்.. டாடா படத்திற்கு நடிகர் சூரி பாராட்டு..

சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான’லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் டாடா திரைப்படத்தை பார்த்த நடிகர் சூரி படத்தை பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “கவின் நடித்துள்ள ‘டாடா’ திரைப்படம் ரொம்ப நிறைவான படமாக உள்ளது. தொடக்கம் முதல் முடிவு வரை செல்போன் பார்க்காமல் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தை பார்த்திருக்கிறேன். பல இடங்களில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைத்தார்கள். இறுதியில் கண்ணீர் வரும் அளவுக்கு அழ வைத்தார்கள்” என்று கூறினார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!