இளையராஜா என் உணர்வு – இயக்குனர் பா.இரஞ்சித் by priya | @ | December 30, 2022 9:25 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக ‘மார்கழியின் மக்களிசை’ எனும் இசை விழாவை நடத்தி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். இதில், பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் கூறியதாவது, “இளைய ராஜா எனக்கு உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போன்று தான் இளையராஜா எனக்கு. அவது பாடல்களை கேட்கும் பொழுது மிகவும் எமோஷனலாக இருக்கும்.அது போன்று தான் நான் யுவன் ஷங்கர் ராஜாவை பார்க்கிறேன். இவரது இசை பல நேரங்களில் என்னை ஊக்குவித்துள்ளது. என்னோட வலியை இசையோடு கலந்து அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். இந்த மேடையில் யுவன் ஷங்கர் ராஜா வந்து நிற்பது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று கூறினார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…