உடல் நலம் தான் முக்கியம்.. சமந்தாவின் அதிரடி முடிவு..

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நடித்துள்ள யசோதா படத்துக்கு சமீபத்தில் டப்பிங் பேசிய போதும் குளுக்கோஸ் ஏற்றிய புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சமந்தாவை உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், சமந்தாவின் உடல்நலம் முழுமையாக குணமடையும் வரை படப்பிடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்க சமந்தா முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடிக்கும் குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சமந்தா விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!