பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான வழக்கு.. நாகார்ஜுனாவுக்கு நோட்டீஸ்..

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் நாகார்ஜுனா விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நாகார்ஜுனா மட்டுமன்றி பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் பதில் மனு தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு விசாரணையை 14 நாட்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை எட்டியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த சீசன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.






இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!