தொகுப்பாளினியாக இருந்து பிறகு சீரியலில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. காதல் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமிக்கு தற்போது இரண்டரை வயதில் சச்சின் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் மகாலட்சுமி தன்னுடைய மகன் பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாட முடிவு செய்துள்ளாராம்.
இதற்கு முன்னர் முதல் பிறந்த நாளை பாங்காங்கிலும், இரண்டாவது பிறந்த நாளை சிங்கபூரிலும் கொண்டாடினோம். தற்போது தனது மகனுக்கு மூன்றாவது பிறந்த நாள் வரப்போகிறது .
அதனால் மூன்றாவது பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாட முடிவு செய்துள்ளோம் என மகாலட்சுமி கூறியுள்ளார்.
மேலும் தனதுமகன் 20 வயதுக்குள் என் மகன் இருபது நாடுகளை பார்க்க வேண்டும் என்பது எங்களது ஆசை என மகாலட்சுமி கூறியுள்ளார்.
இவர் தற்போது வாணி ராணி, தாமரை போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!