நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் – உற்சாகத்தில் சாய் பல்லவி

இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளியான படம் “ஷியாம் சிங்க ராய்”.மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ஷ்யாம் சிங்க ராய் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர் விருதும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் சாய் பல்லவிக்கு கிடைத்தது. இதனை பெற்றுக் கொண்ட சாய் பல்லவி இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரே வருடத்தின் இரண்டு படங்களுக்கும் விருது கிடைத்தது பாராட்டப்பட வேண்டும்! அபரிமிதமான அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் மற்றும் இதுபோன்ற அழகான பாத்திரங்கள் எனக்கு கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். படக்குழு மற்றும் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!