என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பார் – நடிகர் பார்த்திபன் by priya | @ | September 30, 2022 9:34 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று அதிகாலை ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அதில் பார்த்திபன் கூறியதாவது, “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது இயக்குனர் செல்வராகவன் கூறியது. அந்த படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் தனுஷிற்கு பதிலாக நான் நடித்தேன். இப்பொழுது என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். அவர் நடித்தால் மிகவும் சிறப்பாகவே இருக்கும்” என்று கூறினார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…