மணி சார் நம்முடைய பெரிய அடையாளம் – நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வெளிமாநிலங்களின் புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் திரிஷா ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது, “பல பேர் இந்த படத்தை பார்ப்பதற்காக ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெளிமாநிலத்தவர்களும் நம் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதல் பான் இந்திய திரைப்படத்தை மணி சார் தான் ஆரம்பித்தார். அதனால் மணி சாரை அனைவருக்கும் தெரிகிறது. அவர் நம்முடைய பெரிய அடையாளமாக இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானும் மணிசாரும் வரும் பொழுது தமிழ்நாட்டில் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்களோ அதுபோல் தான் வெளிமாநிலங்களிலும் இருக்கிறார்கள்” என்று கூறினார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!