அப்பா மகள் பாசத்தை அழகாக கூறிய விக்னேஷ் சிவன்.. குழம்பிப்போன நெட்டிசன்கள்..

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கணவரின் இயலாமையை கேலி செய்யும் மனைவியிடம் அறியாமை தவறில்லை என நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கணவருக்காக மனைவியிடம் பரிந்து பேசுவார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு பலரும் சமூக வலைதளத்தின் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று” என்று குறிப்பிட்டிருந்தார்.

‘சேர்ந்ததன்று’ என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொண்ட நெட்டிசன்கள் பலர் பதிவு செய்வதற்கு முன்பு நன்கு படித்து விட்டு பதிவு செய்யுங்கள் என கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், விக்னேஷ் சிவனுக்கு குரல் கொடுக்கும் விதமாக தொகுப்பாளினி அஞ்சனா இந்த பதிவிற்கு விளக்கமளித்து பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவில், “சேர்ந்ததென்று என்று டைப் செய்யவில்லையே! சேர்ந்ததன்று என சரியாக தானே டைப் செய்திருக்கிறார்! சேர்ந்தது + அன்று பொருள் சேர்ந்தது அல்ல! சுத்தமான தமிழ்! இது புரியாம எவ்வளவு கமெண்ட்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!