இனி அந்த மாதிரி நடிக்க மாட்டேன்.. சமந்தா அதிரடி

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த சமந்தாவுக்கு இந்தி பட வாய்ப்புகளும் வந்துள்ளன. சமந்தா நாகசைதன்யாவை திருமணம் செய்வதற்கு முன்பும், அவரை விவாகரத்து செய்து பிரிந்த பிறகும் அரைகுறை உடையில் அதிக கவர்ச்சியாக நடித்து வருகிறார். பேமிலிமேன் வெப் தொடரில் நெருக்கமான கவர்ச்சி காட்சியில் நடித்ததே விவாகரத்துக்கு காரணம் என்றும் பேசப்பட்டது. சமீபத்தில் புஷ்பா படத்தில் குத்துப்பாடலிலும் சமந்தா கவர்ச்சியாக ஆடி இருந்தார். சமூக வலைத்தளத்திலும் தனது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்தார்.

இந்நிலையில் இனிமேல் புதிய படங்களில் கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று சமந்தா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு சமூக வலைத்தளங்களில் இருந்தும் சற்று விலகி இருக்க சமந்தா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கதாநாயகனுடன் நெருக்கமான காட்சிகள் இருக்க கூடாது, முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன், அரைகுறை உடையில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை விதிப்பதாகவும், அதற்கு சம்மதிப்பவர்களின் படங்களில் மட்டுமே நடிக்க சமந்தா கால்ஷீட் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க முன்னுரிமை கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!