கேரவன் கேட்டு அடம் பிடித்த பிரபல நடிகர்.. நடிப்புக்கு 2 ஆண்டுகள் தடை

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அனிருத் ஜட்கர். இவர் ஏராளமான கன்னட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் அருண் விஜய் நடிப்பில் 2002-ல் வெளியான முத்தம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் ஜோதே ஜோதேயாலி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

அனிருத் ஜட்கருக்கும் ஆரூர் ஜெகதீஷுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த படப்பிடிப்பிலும் இயக்குனருடன் தகராறு செய்து அனிருத் ஜட்க நடிக்காமல் பாதியில் வெளியேறியுள்ளார். அவர் கேரவன் கேட்டு அடம்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்து, அனிருத் ஜட்கர் மீது கன்னட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் அனிருத் ஜட்கர் 2 ஆண்டுகள் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தடை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜோதே ஜோதேயாலி தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!