புடவை கட்டினாலும் கவர்ச்சியா? வாணி போஜன் ஆதங்கம்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இருந்தபோதிலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. இதையடுத்து தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்க தயார் என வாணி போஜன் முடிவெடுத்தார்.

இதனைத்தொடர்ந்து தனது கவர்ச்சியான படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், “கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்கிறார்கள். காலத்துக்கு ஏற்றபடி நம் சிந்தனையும் மாறவேண்டும்” என்றார். இவரின் இந்த கருத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!