அதே கூட்டணியை தொடர்ந்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியை இவர் வில்லனாக நடிக்க வைத்திருந்தாலும் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யாவை இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். சூர்யாவுக்கு கடைசி 15 நிமிட காட்சிகளே என்றாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் அவர் படுபயங்கரமாக மிரட்டி இருந்தார்.
இதுவரை ஆக்ஷன் திரைப்படங்கள், காதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த சூர்யாவுக்கு இந்த வில்லன் கேரக்டர் மிக அழகாகவே பொருந்தியது. இனி வரும் படங்களிலும் சூர்யா வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் ராம் சரண் நடிக்கும் ஆர்சி 15 என்ற படத்தில் சூர்யா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகின்றன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல இன்டர்வியூகளில் தனக்கு மன்சூரலிகான் மிகவும் பிடிக்கும் என தெரிவித்திருக்கிறார், இப்படி இருக்க தளபதி 67 திரைப்படத்தில் தற்போது மன்சூரலிகான் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழைய வில்லன்களை புது படங்களில் கொண்டுவரும்போது பொதுவாகவே அவர்களை ஒரு காமெடி கதாபாத்திரத்தை கொடுக்கின்றனர். லோகேஷ் கனகராஜின் இந்த படம் மன்சூர் அலிகானை மறுபடியும் அதே கேப்டன் பிரபாகரன் வில்லனாக காட்டுமா, இல்லை வழக்கம்போல காமெடியாக காட்டி விடுமா என்பது பட ரிலீஸின்போது தெரியும்.
- இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!