சமந்தா எங்களின் சொத்து.. இணையத்தில் வைரலாகும் சான்றிதழ்

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை.

சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இதுவரைக்கும் நேரடியான கருத்து மோதல் எதுவும் ஏற்படவில்லை. பிரிந்து இருந்தாலும் அவரவர் பணிகளில் தீவிர கவனமாக இருந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக இருவருக்கும் மறைமுக கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமந்தாவின் பள்ளி மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் பரவி வருகிறது. சென்னை பல்லாவரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து முடித்த சமந்தா, படிக்கும் போதே திறமையானவராக இருந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு படித்தபோது எல்லா பாடங்களிலும் எண்பதுக்கும் மேற்பட்ட மதிப்பெண்ணை பெற்றிருப்பதால் சமந்தா எங்கள் பள்ளியின் சொத்து என்று சான்றிதழில் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்த சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!