தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வாரிசு நடிகை ராஷ்மிகா! காரணம் இதுதான்

ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டும் திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என தெரிகிறது.
மேலும் தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் சில படங்கள் நடித்து வருகிறார்.

தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு
ராஷ்மிகா நடித்து இருக்கும் சீதா ராமம் படத்தின் பிரெஸ் மீட் சென்னையில் நடந்தபோது அவர் வரவில்லை. மேலும் புஷ்பா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் நடந்தபோது அவர் வரவில்லை.

அதை குறிப்பிட்டு ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்க “இந்த வருடம், அடுத்த வருடம் என்னை அதிகம் பார்க்கப்போகிறீர்கள்.. நம்புங்கள். ஏற்கனவே இருந்த கமிட்மென்ட் காரணமாக இன்று வர முடியவில்லை” என ராஷ்மிகா பதில் அளித்து இருக்கிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!