நடிகர் விஜய் ஆசைப்பட்டு செய்யாமல் தயங்கும் விஷயம்! ரசிகர்கள் தான் காரணமா

விஜய் தயங்குவதன் காரணம்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் அவருக்கு பெரிய மார்க்கெட்டை உண்டாகி வருகிறது.

அந்த வகையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் விமர்சனங்களை சந்தித்தாலும், அப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் அடுத்தாண்டு பொங்கலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் திரைபயணத்தில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுப்பவர் இயக்குநர் ஃபாசில், இவர் இயக்கத்தில் விஜய் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இயக்குநர் ஃபாசில் விஜய் அவரிடம் பகிர்ந்துக் கொண்ட விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது “விஜய்க்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்க ஆசை.

ஆனால் அவர் தனது ரசிகர்களுக்கு பயந்தே அது போன்ற திரைப்படங்களில் நடிக்க முன்வருவது இல்லை, என்னென்றால் அவரின் ரசிகர்களுக்கு டான்ஸ் மற்றும் பைட் இல்லாமல் படம் பிடிக்காது என்பதற்காக” என இயக்குநர் ஃபாசில் தெரிவித்துள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!