ஆலியா பட்டுக்கு இரட்டை குழந்தைகள்? ரன்பிர் கொடுத்த ஹின்ட் வைரல்

பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் இருவரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு வந்ததால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

ஆலியா லண்டனில் ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்டு சமீபத்தில் தான் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரன்பீரிடம் ‘உங்களை பற்றி இரண்டு உண்மைகள் மற்றும் ஒரு பொய் சொல்லுங்க’ என கேட்கப்பட்டது. அதற்க்கு அவர் “எனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க போகிறது, நான் அடுத்து ஒரு பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடிக்க போகிறேன், நான் நடிப்பதில் இருந்து long break எடுக்கப்போகிறேன்” என மூன்று விஷயங்களை கூறி இருக்கிறார்.

பிசியாக நடிகராக இருக்கும் ரன்பீர் தற்போது சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கிறார் என்பது பொய்யாக தான் இருக்கும்.

அதனால் மீதம் இருக்கும் இரண்டு விஷயங்களும் உண்மை தான் என ரசிகர்கள் முடிவுக்கு வந்துவிட்டனர். மேலும் அவர் வரலாற்று படத்தில் நடிப்பதும் உண்மை தான்.
அதனால் ஆலியா பட்டுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கப்போகிறது என செய்தி வேகமாக பரவி வருகிறது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!