பிதாமகன் படத்திற்கு பின் மீண்டும் இணையவிருந்த விக்ரம் – சூர்யா.. ஆனால்

மீண்டும் இணையவிருந்த சூர்யா – விக்ரம்
பாலா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று பிதாமகன். இப்படத்தில் சூர்யா – விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்கள்.

இந்த கூட்டணி அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பின் சூர்யா – விக்ரம் இருவரும் இணையவிருந்தார்களாம்.

ஆனால், அந்த கால்ஷீட் காரணமாக அந்த கூட்டணி அப்போது அமையவில்லையாம். ஆம், வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காவியத்தலைவன்.


இப்படத்தில் தான், விக்ரம் – சூர்யா இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதாக இருந்ததாம். ஆனால், அப்போது அவர்கள் இருவரின் கால்ஷீட் கிடைக்காமல் போக, அதன்பின் சித்தார்த் – பிரித்விராஜ் இப்படத்தில் நடித்து படம் வெளியானதாம். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!