“விஜய்யிடம் ரஜினியை பார்க்கிறேன் !” – தமிழ் சினிமாவின் முக்கிய ஜாம்பவான் சொன்ன கருத்து.,

வசூல் நாயகன் விஜய்
நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்யுடன் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் குறித்து ஜாம்பவான்

இந்நிலையில் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தெறி, பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த அப்படத்தில் விஜய்யுடன் இயக்குநர் மகேந்திரனும் நடித்திருப்பார்.

மேலும் அப்போது திரைப்படம் வெளியாகும் போது நடிகர் விஜய் குறித்து பேசிய மகேந்திரன். “நான் விஜய்யிடம் ஒரு ரஜினியைப் பார்க்கிறேன். அவர் மிக பெரிய உயரத்திற்கு சென்றாலும் எப்போதும் எளிமையாக உள்ளார்.

என்னுடன் அவர் நடிக்கும் போது அவரில் உள்ள ஒரு சிறந்த நடிகரை பார்த்தேன். அந்த காட்சியை திரையில் பார்த்தப்போது கைதட்டி ரசித்தேன். கமர்சியல் தமிழ் சினிமாவில் விஜய் ஒரு அரிய கண்டெடுப்பு” என பேசியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!