விஜய்யின் பிகிலுக்கு இல்லாத விஷயம் ரஜினியின் தர்பார் படத்துக்கு மட்டும் எப்படி நடந்தது?

விஜய்யின் பிகில் படம் கடந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ். படம் வெளியாகும் முதல் நாள் சிறப்பு காட்சிகள் கிடையாது என்று அரசு முதலில் கூறியிருந்தது.

பின் ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப சிறப்பு காட்சிக்கு முதல் நாள் அரசு அனுமதித்தது. தற்போது ரஜினியின் தர்பார் படத்திற்கு 4 நாள் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதித்துள்ளது, இது ஏன் என ஒரு பேட்டியில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், பிகில், தர்பார் இரண்டு படங்களும் எங்களுக்கு ஒன்று தான். அவர்கள் கேட்டிருப்பார்கள் அதனால் 4 நாள் ஒதுக்கியிருப்பார்கள் என பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!