தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்தேன், ஒரு இடத்தில் கூட..: ராதாரவி பேச்சால் வெடித்த சர்ச்சை

நடிகர் ராதாரவி இதுவரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அவர் மேடையில் பேசும்போது கூறும் விஷயங்கள் அவரை சர்ச்சைகளில் சிக்க வைத்து விடுகிறது. இதற்க்கு முன் நயன்தாரா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய அவர் தற்போது கனல் என்ற படத்தின் விழாவில் தமன்னா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

“தமன்னாவை விமான நிலையத்தில் சந்தித்தேன், அவரை சுத்தி சுத்தி பார்த்தேன்.. ஒரு இடத்திலாவது கருப்பு இருக்காதா என தேடினேன். அவ்வளவும் வெள்ளை. அவரை போலவே இந்த பட ஹீரோயினும் செக்க சிவப்பாக இருக்கிறார்.”


“அவரை பார்த்துவிட்டு எதோ கிளாமராக நடித்திருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் காவியத்தலைவி போல நடித்து இருக்கிறார்” என ராதாரவி கூறினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கும் நிலையில், ஹீரோயின்கள் பற்றி மோசமாக பேசும் ராதாரவிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!