மீண்டும் இணையும் ஜெய் பீம் கூட்டணி.. அதிரடியாக வெளிவந்த அறிவிப்பு

ஜெய் பீம்
TJ ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமல் ஜோஷ், சூர்யா, ரஜிஷா விஜயன் என பலரும் நடித்து கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.

மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற இப்படத்திற்கு சிலரிடம் இருந்து பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இருவரும் பல இன்னல்களை சந்தித்தார்கள்.

மீண்டும் இணையும் கூட்டணி
மாபெரும் வெற்றியை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், சூர்யா – ஞானவேல் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகாவுள்ளது என அதிரடியான தகவல் வெளியாகியுள்ளது. இதை 2டி நிறுவனத்தில் துணை தயாரிப்பாளராக இருக்கும் ராஜசேகர் பாண்டியன் கூறியுள்ளார்.

இதன் மூலம் மீண்டும் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.\
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!