இதுவரை தமிழ் திரையுலகில் தோல்வியை காணாத மூன்று நபர்கள்..ஷாக்கிங் செய்தி

தோல்வியை காணாத நட்சத்திரங்கள்
தமிழ் திரையுலகில் இதுவரை தோல்வியை காணாத மூன்று முன்னணி நட்சத்திரங்கள் குறித்து சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அது வேற யாருமில்லை. இயக்குனர்கள் வெற்றிமாறன், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் தான்.

ஆம், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய ஐந்து படங்களும் தோல்வியை தழுவவில்லை.

அதே போல், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய நான்கு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

மேலும், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் சமீபத்தில் வந்த விக்ரம் என அனைத்து படங்களும் வெற்றியை மட்டுமே ருசித்துள்ளது.

இதனால், இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத மூன்று இயக்குனர்கள் இவர்கள் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!