இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தா தான் ! திடீரென விலகிய டாப் நடிகர்..

தொகுப்பாளரான சமந்தா 
தென்னிந்திய திரையுலகின் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா, இவர் நடிப்பில் வெளியாகும் தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.

அதன்படி புஷ்பா திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அப்படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இதனிடையே இப்படங்களை தொடர்ந்து சமந்தா யசோதா, குஷி உள்ளிட்ட பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6-யை சமந்தா தான் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசன்களை சமந்தாவின் முன்னாள் கணவரின் அப்பா நாகார்ஜூனா தான் தொகுத்து வழங்கி வந்தார்.

அவர் தற்போது திரைப்படங்களில் பிஸியாகி இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி சமந்தா தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!