நடிகை சாய் பல்லவியின் எதிர்பாராத முடிவுகள்.. கடும் வருத்தத்தில் ரசிகர்கள்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. ஆனால் இதற்கு முன்பு வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.

இதனை தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதன்பின் சமீபத்தில் நாணி நடிப்பில் வெளிவந்த ஷ்யாம் சிங்க ராய் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும், தற்போது இவர் நடித்துள்ள விராட பர்வம் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதன்பின் எந்த ஒரு படத்திலும் சாய் பல்லவி கமிட்டாகவில்லை. எந்த கதையை கேட்டாலும், சாய் பல்லவி நிராகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சாய் பல்லவியின் இந்த செயல் அவருடைய ரசிகர்களுக்கு பெரிதும் வருத்தம் அளித்து வருகிறது. ஒரு புறம் திருமணத்திற்காக தயாராகி வருவதினால் தான், சாய் பல்லவி படங்களில் கமிட்டாக வில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!