விவாகரத்து சர்ச்சை.. தனிமை குறித்து பேசிய சீரியல் நடிகை ரசித்தா

ரசித்தா – தினேஷ் விவாகரத்து சர்ச்சை
நடிகை ரசித்தாவிற்கும் பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக, இருவரும் தற்போது தனித்தனி வீட்டில் வாழ்த்து வருவதாக ஏற்கனவே சர்ச்சை ஒன்று எழுந்தது.

தனிமை
இந்நிலையில், நடிகை ரசித்தா கலர்ஸ் தமிழ் சீரியலில் நடித்து வரும் இது சொல்ல மறந்த கதை சீரியல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை தனி ஆளாக இருந்து வளர்க்கும் பெண்ணாக நடித்துள்ளார் நடிகை ரசித்தா.

இந்த கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாக இந்த பேட்டியில் பேசிய ரசித்தா, தற்போது தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் Maturity-யும் தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!