விஜயின் பீஸ்ட் படத்தால் திரையரங்குகளுக்கு வந்த பெரிய தலைவலி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை..

பீஸ்ட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது, இதற்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது, மாஸ்ஸான காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ள பீஸ்ட் ட்ரைலர் பார்வைகளை குவித்து வருகிறது.  

திரையரங்குகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  

இந்நிலையில் நேற்று வெளியான பீஸ்ட் ட்ரைலரை தமிழகத்தில் பல இடங்களிலும் திரையிட்டுள்ளனர். அதில் ஒன்றான நெல்லையில் உள்ள ராம்
திரையரங்கம் பீஸ்ட் பட சிறப்பு காட்சியின் போது ரசிகர்களால் சேதப்படுத்தப்பட்டது.

இதனிடையே திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இலவசமாக டிரெய்லர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்கவேண்டும்.

மேலும், பிரச்னைகள் ஏற்படும்போது திரையரங்கத்தின் உரிமத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!