நன்றி கூறி கடிதம் எழுதிய நடிகர் அஜித் குமார்.. யாருக்காக தெரியுமா

நடிகர் அஜித் அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

கேரளாவில் அஜித்
அஜித் சமீபத்தில் கேரளாவிற்கு சென்றிருந்தார். அங்குள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நன்றி கடிதம் 
தனக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவரும் நன்றி கூறி, இந்த கடிதத்தை எழுதியுள்ளார் அஜித்.

மேலும், அவர்களுடைய, குரு க்ரிப்பா டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!