விரைவில் மும்பை பறக்கும் நயன்தாரா.. காரணம் இதுதான்!

நடிகை நயன்தாரா தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக நடித்து இருக்கின்றனர்.

மும்பைக்கு பறக்கிறார்
நயன்தாரா ஏப்ரல் முதல் வாரத்தில் மும்பைக்கு பறக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் படத்தில் நடிப்பதற்காக தான் செல்கிறார்.

அறிவிக்கப்பட்டு நீண்ட காலமாக தாமதமாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக தற்போது தொடங்க இருப்பதாக தெரிகிறது. Film City Studiosல் தான் ஷூட்டிங் நடக்க இருப்பதாக பாலிவுட் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இருப்பினும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும் என்றும் கூறி உள்ளனர்.

ஷாருக் கான
ஷாருக் கான் தற்போது நடித்து வரும் Pathaan படத்தின் ஷூட்டிங் தற்போது ஸ்பெயினில் நடந்து வருகிறது. அங்கு ஷூட்டிங் 27ம் தேதியோடு முடிகிறது. அதற்கு பிறகு அட்லீ படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!