மொத்தமாக முடித்துக்கொண்ட சமந்தா.. நாக சைதன்யா குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி

சமந்தா தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாக சைதன்யாவை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் எடுத்த இந்த முடிவு அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமாவில் பிஸி
சமந்தா விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அவர் தற்போது யசோதா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் ஒருவர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வந்திருப்பதால் சமந்தாவுக்கு அதிகம் சண்டை காட்சிகள் இருக்கும் என தெரிகிறது.

மேலும் அவர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு புது படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார்.

நாக சைதன்யாவை Unfollow செய்தார்
தற்போது சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை இன்ஸ்டாகிராமில் unfollow செய்துவிட்டார். ஏற்கனவே அவரது கணக்கில் இருந்த நாக சைதன்யா போட்டோக்கள் அனைத்தையுமே சமந்தா நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நாக சைதன்யா சமந்தாவை இன்ஸ்டாவில் இன்னும் பின்தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறார்.

சமந்தா ஏற்கனவே தனது திருமண சேலையை நாகார்ஜூனா குடும்பத்துக்கு திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், இப்போது மொத்தமாக அனைத்தையும் முடிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் unfollow செய்திருக்கிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!