பாவனாவுக்கு கிடைத்த கவுரவம்.. எழுந்து நின்று வரவேற்ற மக்கள்

சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை பாவானாவை மக்கள் எழுந்து நின்று ஆரவாரத்தோடு கரவொலி எழுப்பி வரவேற்றுள்ளனர்.


தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.


இந்நிலையில், கேரளாவில் தொடங்கி உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பாவனா கவுரவிக்கப்பட்டு உள்ளார். விழா தொடங்கும் சில நிமிடங்கள் முன்பாக விழா அழைப்பிதழில் பாவனா பெயர் இல்லாத நிலையில் போராட்டத்தின் இன்னொரு பெண் வடிவமான பாவனாவை மேடைக்கு அழைக்கிறோம்” என்று அவரது பெயரை சொல்லி அழைத்தனர்.


உடனே கூட்டத்தினர் ஆரவாரத்தோடு கரவொலி எழுப்பினார்கள். மந்திரிகள் உட்பட மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாவனாவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.


பின்னர் பாவனா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். கேரள கலாசாரத் துறை மந்திரி ஷாஜி செரியன் பேசும்போது “கேரளத்தின் ரோல் மாடல் நீங்கள்” என்று பாவனாவை புகழ்ந்தார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. நடிகை பார்வதி இந்த வீடியோவை பகிர்ந்து, “வெல்கம் பேக் பாவனா. இந்த இடம் உனக்கானது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!