காதலிக்காக மனதை மாற்றிக் கொண்ட நாயகன்

இரண்டெழுத்து நாயகனும், நான்கெழுத்து நாயகியும் காதலை முறித்துக் கொண்டதாக கோலிவுட்டில் பேசப்படும் நிலையில், தற்போது அதில் உண்மை இல்லை என்றும், இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு தான் அது என்றும் இருவருக்கும் நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியிருக்கிறாராம்.

இருவரும் காதலர்கள் என்பது வெளியே தெரிந்தால், தனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்பதற்காக நாயகி இவ்வாறு கேட்டுக் கொண்டாராம். இருவரும் பேசி பிரிந்து விட்டதாக சொல்வோம். அதுதான் இருவருக்குமே நல்லது என்று நாயகி கூற, நாயகனான காதலன் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாராம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.